சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர், சுத்தம் செய்பவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 3557 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் :
சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மொத்தம் 3557 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலேயே அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
Madras High Court வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Office Assistant -1911, Office Assistant cum Watchman - 01, Copyist Attender - 03,
Sanitary Worker - 110, Scavenger - 06, Scavenger/Sweeper - 18, Scavenger or Sanitary Worker - 01, Gardener - 28, Watchman - 496,
Night Watchman - 185, Night Watchman cum Masalchi - 108, Watchman cum Masalchi - 15, Sweeper - 189, Waterman/woman - 01, Masalchi - 485 என மொத்தம் 3557 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான கல்வித் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்.
வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரருக்கு 01.07.2021 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
ஊதியம் :
சென்னை உயர் நீதிமன்றத்தின் இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய இணையதள முகவரிகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இதர தகுதிகள் : இங்கே கிளிக் செய்யவும்.
நேரடியாக விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள்
அறிவிப்பு வெளியான நாள் - 18.04.2021
இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் சமர்ப்பித்தற்கான கடைசி நாள் - 06.06.2021
செலான் வழியாக இந்தியன் வங்கியில் கட்டம் செலுத்த கடைசி நாள் - 06.06.2021
விண்ணப்பிக்கும் முறை :
சென்னை உயர் நீதிமன்றத்தின் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணையதளத்தின் மூலம் 18.04.2021 முதல் 06.06.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு முறை :
விண்ணப்பதாரர்கள் மூன்று தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதன்படி, விண்ணப்பதாரருக்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் Oral Test உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mhc.tn.gov.in அல்லது https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.