சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.19,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை உயர்நீதிமன்றம்
பணியிடம் : உயர்நீதிமன்றம் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகம்
பணி : ஓட்டுநர்
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அனுபவம் மற்றும் தகுதி : இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் ஓட்டுவதில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 1.7.2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : லெவல் 8-ன்படி, மாதம் 19,500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் சுயவிண்ணப்பம் தயாரித்து அதனை, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகத்துக்கு மார்ச் 2 ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












