ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் அரசு வேலை வேண்டுமா?

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கிளை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 573க்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

By Saba

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கிளை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 573க்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்னும் இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் அரசு வேலை வேண்டுமா?

நிர்வாகம் : சென்னை உயர்நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

  • கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - 76
  • டைப்பிஸ்ட் - 229
  • உதவியாளர் - 119
  • வாசிப்பாளர்/ஆய்வாளர் - 142
  • ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 07

கல்வித் தகுதி:-

  • இப்பணியிடங்களுக்குக் குறைந்தபட்சமாக ஏதேனும் ஓர் துறையில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • வாசிப்பாளர் மற்றும் ஆய்வாளர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணிகளை தவிர மற்ற பணிகளுக்குக் கணினி தொடர்பான சான்றிதழ் படிப்பு அவசியம்.
  • கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர் பணிகளுக்குத் தட்டச்சு சான்றிதழ் கட்டாயம்.

வயது வரம்பு :-

  • பொது பிரிவினர் ஜூலை 1, 2019 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
  • எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி பிரிவினர் ஜூலை 1, 2019 அன்று 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.
  • ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் பணிபுரிபவராக இருந்தால் 18 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம்.

ஊதியம்:-

கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்
டைப்பிஸ்ட் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
உதவியாளர் - ரூ.20,000 முதல் ரூ.63,600 வரையில்
வாசிப்பாளர்/ஆய்வாளர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொதுப் பிரிவினருக்கு ரூ.300
  • எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வுக் கட்டணம் கிடையாது.

தேர்வு முறை :-

முதலில் எழுத்துத் தேர்வு நடைபெறும். பின், திறன் அறியும் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வ செய்யப்படுவர்.

பணியிடம்:-

சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றில் பணி நியமனம்.

முக்கிய தேதிகள்:-

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 2019 ஜூலை 31
தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் : 2019 ஆகஸ்ட் 2

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras High Court Recruitment 2019 – Apply Online 573 Computer Operator, Typist Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X