மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாண்மை அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,753 பணியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ளது. இதில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக எல்ஐசி அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 1,257 பணியிடங்களுக்குத் தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : எல்ஐசி
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பயிற்சி மேலாண்மை அலுவலர்
மொத்த காலிப் பணியிடங்கள் :
- 1,753.
- தென்னக சென்னை எல்ஐசி அலுவலகத்தின் காலியிடங்கள் - 1,257
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
- பயிற்சிக் காலம் உதவித் தொகையாக மாதம் ரூ.34,503 வழங்கப்படும்.
- பின்னர் Probationary Development Officer-ஆக நியமனம் செய்யப்பட்டு மாதம் ரூ.21,865 முதல் ரூ.55,075 வழங்கப்படும்.
தேர்வு முறை : முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.licindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.06.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.licindia.in/Bottom-Links/Careers என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.