கைநிறைய ஊதியத்துடன் அரசாங்க வேலை! அழைக்கும் கிருஷ்ணகிரி நூற்பாலை!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் செயல்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், மின் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் செயல்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், மின் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கைநிறைய ஊதியத்துடன் அரசாங்க வேலை! அழைக்கும் கிருஷ்ணகிரி நூற்பாலை!!

நிர்வாகம் : மாவட்ட கூட்டுறவு நூற்பாலை

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 03

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

இளநிலை உதவியாளர்:

இளநிலை உதவியாளர் பணிக்கு 2 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலை உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மின் பொறியாளர்:

மின் பொறியாளர் பிரிவில் ஒரு காலிப் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் (மின்னியல்) பட்டம் அல்லது இளநிலை பொறியியல் (மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கைநிறைய ஊதியத்துடன் அரசாங்க வேலை! அழைக்கும் கிருஷ்ணகிரி நூற்பாலை!!

மின் பொறியாளர் பணிக்கு 2 வருடம் முன் அனுபவத்துடன் மின் ஆய்வுத்துறையால் வழங்கப்பட்ட சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.9,300 முதல் ரூ. 34,800 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பணியிடத்திற்கும் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நூற்பாலை அலுவலகத்துக்கு நேரில் சென்று, விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Krishnagiri Co-operative textile corporation invites application for JA and Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X