கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் செயல்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், மின் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : மாவட்ட கூட்டுறவு நூற்பாலை
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 03
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
இளநிலை உதவியாளர்:
இளநிலை உதவியாளர் பணிக்கு 2 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலை உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மின் பொறியாளர்:
மின் பொறியாளர் பிரிவில் ஒரு காலிப் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் (மின்னியல்) பட்டம் அல்லது இளநிலை பொறியியல் (மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மின் பொறியாளர் பணிக்கு 2 வருடம் முன் அனுபவத்துடன் மின் ஆய்வுத்துறையால் வழங்கப்பட்ட சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.9,300 முதல் ரூ. 34,800 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பணியிடத்திற்கும் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நூற்பாலை அலுவலகத்துக்கு நேரில் சென்று, விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும்.