காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPS) காலியாக உள்ள Data Entry Operator, Accountant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.21 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், காஞ்சிபுரம் (DCPS)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 11
பணி : Data Entry Operator, Accountant, Social Worker, Protection Officer மற்றும் Counselor
கல்வித் தகுதி:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், 1 முதல் 3 ஆண்டுகள் வரையில் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Protection Officer - ரூ.21,000
- Legal cum Probation Officer - ரூ.21,000
- Counselor - ரூ.14,000
- Social Worker - ரூ..14,000
- Accountant - ரூ.14,000
- Data Analyst - ரூ.14,000
- Assistant cum Data Entry Operator - ரூ.10,000
- Outreach Workers - ரூ.8,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிபுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The District Child Protection Officer,
District Child Protection Unit,
No.317 K.T.S Mani Street, Mamallan Nagar,
Kancheepuram - 631502
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அறிவிப்பு வெளியாகி 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.