காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 130 உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய கூட்டுறவு வங்கி, காஞ்சிபுரம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 130
வயது வரம்பு : 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம் : கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம் : காஞ்சிபுரம்
ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.ரூ.47,500 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.kpmdrb.in என்னும் இணையதள முகவரி வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5 செப்டம்பர் 2019
விண்ணப்பக் கட்டணம் : 250 ரூபாய்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் : 13 அக்டோபர் 2019, மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரையில்
விண்ணப்பதாரர்களில் தகுதியுடையவர்களுக்கு எழுத்துத் தேர்விற்கான அழைப்பு விடுக்கப்படும். அவர்களுடைய விபரங்கள் http://www.kpmdrb.in இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், காஞ்சிபுரத்தில் தேர்வு முகாம் குறித்த விபரம் மின்னஞ்சல் வழியாக அறிவிக்கப்படும்.