மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.30 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியித்திற்கு இளங்கலைப் பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கலாக்ஷேத்ரா பவுண்டேஷன் (Kalakshetra Foundation)
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : சென்னை
பணி : Consultant (Outreach Coordinator)
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் அல்லது கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் டிப்ளமோ அல்லது போஸ்ட் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.30,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kalakshetra.in அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவம் தளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் 25.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.kalakshetra.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.