திருச்சி மாவட்டம், துறையூரில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுத்திறன் மேம்பாட்டு சிறப்பு மையம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்திற்கு உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கும் வகையில் ஆட்கள் தேர்வு செய்ப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளி
மேலாண்மை : தமிழக அரசு
பணி மற்றும் காலிப் பணியிடம் :
- உடற்கல்வி இயக்குநர் - 01
- உடற்கல்வி ஆசிரியர் - 02
கல்வித் தகுதி :
உடற்கல்வி இயக்குநர் - இளங்கலை பட்டபடிப்புடன் உடற்கல்வி பாடத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர் - இளங்கலை பட்டம் மற்றும் உடற்கல்வியியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
உடற்கல்வி இயக்குநர் - ரூ. 10,000
உடற்கல்வி ஆசிரியர் - ரூ. 8,000
தேர்வு முறை : விண்ணப்பிக்கும் நபர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வுக்குழுவால் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்படும். பழங்குடியினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 27.03.2019