சென்னையில் செயல்பட்டு வரும் அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மொத்த காலிப் பணியிடம் : 12
பணி மற்றும் பணியிட விபரம்:-
- சமையலர் : 07
- நாவிதர் : 05
தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிற்கு மிகாமலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.)
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நவம்பர் 8ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நவம்பர் 14ம் தேதிக்குள் இயக்குநர், அரசு மனநல காப்பகம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10 என்னும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.