திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும் பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கூட விண்ணப்பித்துப் பயனடையலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : சமையலர் மற்றும் பகுதி நேர துப்புரவாளர்
கல்வித் தகுதி :
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
சமையலர் - ரூ.15,700 முதல் ரூ.50,000 மாதம்
துப்புரவாளர் - ரூ.3000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 12.01.2021-க்குள் விண்ணப்பித்திட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 12.01.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












