சென்னை சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர், ஓட்டுநர், சலவையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
சென்னை திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வரும் சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி மற்றும் பணியிட விபரம்:-
- சமையலர் : 03
- ஓட்டுநர் : 02
- சலவையாளர் : 02
சமையலர் மற்றும் சலவையாளர்:-
தகுதிகள் : எழுதப் படிக்கத் தெரிய வேண்டும்.
வயது வரம்பு :
- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் : 32 வயதிற்கு உட்பட்டு
- ஆதிதிராவிடர் : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- இதர விண்ணப்பதாரர்கள் : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அடிப்படை ஊதியம் : ரூ.15,700
ஓட்டுநர் :-
தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம் : குறைந்தது 2 ஆண்டுகள்
வயது வரம்பு:-
- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் : 32 வயதிற்கு உட்பட்டு
- ஆதிதிராவிடர் : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- இதர விண்ணப்பதாரர்கள் : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அடிப்படை ஊதியம் : ரூ.19,500
விண்ணப்பம் பெற:-
சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் நவம்பர் 26ம் தேதி முதல் டிசம்பர் 02ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் டிசம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை, சேப்பாக்கம், சென்னை -05
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய 044 28545123 என்னும் தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.