மத்திய ஆட்சிப்பாணி ஆணையம் நடத்தும் பொறியாளர் பணிக்க்கான காலிப்பணியை நிறைவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது . யூபிஎஸ்சி இந்தியாவின் நிர்வாகப்பணி, பாதுகாப்புபடை, பொருளியலாளர் புள்ளியிலாளர் போன்ற பணிகளுக்கான தேசிய அளவில் தேர்வினை நடத்தும் அமைப்பாகும் .
யூபிஎஸ்சி நடத்தும் பொறியலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . பொறியியல் பணிக்கு முதண்மை , முக்கிய தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
மொத்தம் யூபிஎஸ்சி அறிவித்துள்ள மொத்த காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 588 ஆகும் . விதிமுறைகளின் படி இப்பணியில் மூன்று நிலை தேர்வுகளையும் கடந்து வெற்றி பெறுவோர்க்கு சம்பளம் கிடைக்கும் .
யூபிஎஸ்சி நடத்தும் இன்ஜினியரிங் தேர்வுக்கான பணியிடம் இந்தியா முழுவதும் இருக்கும் . யூபிஎஸ்சி பணியிடத்துக்கு விண்ணப்பிபோர் பொறியியல் , சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் பாடத்தில் அங்கிகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
இன்ஜினியரிங் பணிக்கு விண்ணப்பித்திருப்போர் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 23க்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும் . எஸ்சி, எஸ்டி, மாற்றுதிறனாளி பெண்கள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பொறியியலாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 23 இறுதிதேதியாகும் . மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் . விதிமுறைகளுகேற்ப வயது வரம்பானது மாறுபடும் .
அதிகாரபூர்வ இணையத் தளத்தை இங்கு இணைத்துள்ளோம் . விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் .
சார்ந்த பதிவுகள்:
இந்திய நெடுஞ்சாலைதுறையில் வேலை வாய்ப்பு