சிப்பிங் கார்பரேசன் ஆஃப் இந்தியவில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சிப்பிங் கார்பரேசன் பணியிடத்தில் 50 இன்ஜின் ரூம் பெட்டி ஆஃபிஸர் மற்றும் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவரிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிப்பிங் கார்பரேசனில் விதிமுறைகளின் படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சம்பளத் தொகை பெறலாம்.
மும்பையில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் குறித்து அறிவிக்க வேண்டும் . பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பிட்டர், டீசல் , மோட்டார் மெக்கானிக் அல்லது மெஸிஸ்ட், வெல்டர் ஐடிஐ முடித்து பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
சிப்பிங்க கார்பரேசனில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க 45 வயதுகுள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை இணையதளத்தில் கொடுக்கபட்டுள்ளன. மேலும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தேவையான தகவல்களிய பெறலாம். கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
சிப்பிங் ஹவுஸ்,
திசிப்பிங் கார்பரேஷன் இண்டியா,
245 , மேடம் காமா ரோடு,
மும்பை 400021
நேர்முக தேர்வு நடைபெறும் நாள் = நவம்பர் 30 ஆகும் . அதிகாரப்பூர்வ தளத்தின் இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று மும்பையில் செயல்படும் சிப் கார்பரேசன் இண்டியா ஆகும். இது நவரத்தின நிறுவங்களுள் ஒன்றாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழிப் போக்குவரத்தில் சிறந்த பங்கு வகிக்கின்ற இந்தியாவின் சிறந்த நிறுவனங்களில் சிப் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவும் ஒன்றாகும்.
சார்ந்த பதிவுகள்:
மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !
தேசிய திட்ட அமலாக்கத்துறையில் ஆயிரக்கணக்கான காலியிடம் விண்ணப்பிக்கவும் !!
மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கழகத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் !