தேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு பணிக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . தேசிய நெடுஞ்சாலை பணியில் யங் புரொபசனல் பணிக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி 28 அக்டோபர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
தேசிய நெடுஞ்சாலைத் துறைப் பணியில் விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 170 ஆகும் . யங் புரொபசனல் பணிக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியானது சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . கேட் தேர்வு மதிபெண் அவசியமாகும் .
தேசிய நெடுஞ்சாலைத்துறையில் பணியை பெறுபவர்களுக்கு
ரூபாய் 60,000 சம்பளத்தொகையாகப் வழங்கப்படும். தகுதிபெற்றவர்கள் அக்டோபர் 28 ஆம் தேதி நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் . தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை இணைத்து நேரடி தேர்வுக்கு சான்றிதழ் நகல்களுடன் வர வேண்டும் . சான்றிதழ் ஒரிஜினல்களும் இணைத்து உடன் வைத்திருக்க வேண்டும் .
தேசிய நெடுஞ்சாலைப்பணியில் வேலை செய்ய விண்ணப்ப கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை . இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது . தேசிய நெடுஞ்சாலையில் பணி செய்ய 32 வயதுக்குள் இருக்க வேண்டும். கேட் தேர்வின் அடிப்படையில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படும்.
தேசியநெடுஞ்சாலைத்துறையில் பணியாற்ற விண்ணப்பிக்க விருப்பமா உங்களுக்கான அதிகாரபூர்வ தளத்தை இணைத்துள்ளோம் . தேசிய நெடுஞ்சாலையில் விண்ணப்ப அறிவிக்கைத்தளத்தையும் இணைத்துள்ளோம் . வேலை அறிவிப்புக்கான காலியிடங்களின் விவரங்களை கொண்ட தளத்தையும் இணைத்துள்ளோம் .
மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர்களுக்கான விண்ணப்ப தளத்தையும் இணைத்துள்ளோம் . தகுதியுடையோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள் . 170 பேர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் .
சார்ந்த பதிவுகள்:
விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!
பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி!, இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு !!
இஸ்ரோவில் பத்து மற்றும் படட்ப்படிப்பு முடித்தோர்க்கு வேலைவாய்ப்பு !!