இந்திய மஜாகன் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது .
மத்திய அரசின் பொத்துறை நிறுவனமான மகாஜன் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அக்டோபர் 29 வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம் . மும்மையில் பணியிடம் கொண்டது மஜாகன் பணிவாய்ப்பு அத்துடன் பணியிடங்களின் பெயரானது ஸ்டாஃப் அண்டு ஆஃப்ரேட்டிவ் டெக்னிக்கல் என அழைக்கப்படும் தொழில்நுட்ப பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
மொத்தம் நிரப்பபடவுள்ள பணியிடங்கள் எண்ணிக்கையானது 985 ஆகும் . மஜாகன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செபடம்பர் 1 ஆம் தேதிக்குள் 33 வயது வரம்புக்குள் இருக்க வேண்டும் . விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர்கள் ரூபாய் 140 செலுத்த வேண்டும் . எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுதிறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை ஆன்லைனின் மட்டுமே செய்ய வேண்டும் . விண்ணப்பிக்க அதிகாரபூர்வ தளத்தின் இணைப்பை இணைத்துள்ளோம் . மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான துறைமுகத்தில் வேலை செய்ய எழுத்து தேர்வு நேர்முகத்தேர்வு மூலமே தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
இந்திய துறைமுகத்தில் வேலைசெய்ய தேவையான விவரங்களை பெற இங்கு அறிவிக்கை தொடர்பான இணைப்பை இணைத்துள்ளோம் . இவ்றை கொண்டு கல்வித்தகுதி, சம்பளத்தொகை மற்ற விவரங்களை நன்கு அறிந்துகொள்ளலாம். மேலும் துறைமுகத்தில் உள்ள தொழில்நுட்ப பணியிடங்கள் துறைவாரியான ஒதுக்கீடுகள் மேலும் தேர்வர்களுக்கான ஒப்பந்தங்கள் அனைத்து விவரங்களும் இந்த அறிவிக்கையிணை கொண்டு அறிந்து கொள்ளலாம்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வேலை தேடிக்கொண்டிருப்போர் இந்த துறைமுகப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் .
சார்ந்த பதிவுகள்:
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!
ஒஎன்ஜிசியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும்