இந்திய இராணுவத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. பத்து வகுப்பு படிச்சால் என்ன வேலை கிடைக்கின்றது என ஆளாளுக்கு புலம்புற ஆளுகளா நீங்கள், உங்களுக்கான வாய்ப்பை நீங்கள் அறிந்து கொள்ள கேரியர் இந்தியா கல்வித்தளம் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.
இந்திய இராணுவ மருத்துவ மணையில் வேலைவாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய இராணுவ மருத்துவமணையில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு கல்வித்தேர்ச்சி போதுமானது ஆகும். இந்திய இராணுவ மருத்துவமணையில் வாசர் மேன், ஃபூட் ரிப்பேரர், சவைவாலா போன்ற பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளத்தொகையாக ரூபாய் 5,200 முதல் 20,200 தொகை அறிவிக்கப்படும்.
இராணுவ மருத்துவமணையில் பணியாற்ற 18 முதல் 25 வயதுவரை கல்வித்தகுதி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவ மருத்துவமணையில் வேலைவாய்ப்பு பெற எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தகவல்களை அறிந்துகொள்ளலாம் .இந்திய இராணுவ பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பை இணைத்துள்ளோம்.
இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகழ்களை இணைத்து அத்துடன் சுய கையெப்பமிட்டு கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நவம்பர் 10க்குள் விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.
முகவரி :
காமாண்டிங் ஆஃபிஸர்,
165/ மிலிட்டரி ஹால்பிட்டல்,
சி/ஒ 99 ஏபிஒ
இந்திய இராணுவத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி நவம்பர் 10 ஆகும்.
சார்ந்த தகவல்கள் :
இந்திய இராணுவ போர்தளவாடத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் !!
தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு