இந்திய அரசின் நவரத்தின நிறுவனமான பாரத் எலக்டிரானிக்கல் லிமிடெட் பெல் நிறுவனமான பாதுகாப்பு துறைகளுக்கான தளவாடங்கள் நாடு முழுவதும் தொழிற்சாலைகள் அமைத்து உற்பத்தியை அதிகப்படுத்தி தருகிறது . இந்நிறுவனத்தில் காலிப்பணியிடம் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . வேலை தேடி கொண்டிருப்போர்க்கு அருமையான வாய்ப்பாகும்.
இந்நிறுவனத்தில் கஜியாபாத் கிளையில் நிரந்தர அடிப்படையில் நிறுவனத்தில் சீனியர் பொறியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இப்பணிக்கு எலக்டிரானிக்கல் , மெக்கானிகல் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
பெல் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 8 ஆகும் . எலக்டிரானிக்கல் இன்ஜினியரிங்க ஐந்து மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 2 , கம்பியூட்டர் இன்ஜினியரிங் 1 என பிரிக்கப்பட்டுள்ளது .
பெல்நிறுவனத்தில் பணியாற்ற சம்பளமாக ரூபாய் 20,600 முதல் ரூபாய் 46, 500 வரை பெறலாம் . பொறியியல் துறையில் மெக்கானிக்கல் , எலக்டிரானிக்ஸ் , மெக்கானிக்கல், கணினி அறிவியல் துறையில் மாணவர்கள் நான்காண்டுகள் முதல் தரத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . வயது வரம்பு 32க்குள் இருக்க வேண்டும் .
பெல் நிறுவனத்தில் விண்ணப்பிக்க பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 500 செலுத்த வேண்டும் மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்த அவசியமில்லை. எழுத்து தேர்வு , நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
பெல்நிறுவனத்தில் பணியாற்ற ஆன்லைனில் விண்ணப்பித்ததை எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
பாரத் எலக்டிரானிக்ஸ் லிமிட்டெடு,
மேலாளர்,
சாஹியாபாத்,
இண்டஸ்டிரியல் ஏரியா,
காசியாபாத்,-2010110
விண்ணப்பிக்க இறுதிதேதி அக்டோபர் 25 ஆகும் . மேலும் விண்ணப்பிக்க அதிகாரபூர்வ தளத்தை இணைத்துள்ளோம்.
சார்ந்த பதிவுகள்:
இன்ஜினரிங் பணியிடங்களுக்கான யூபிஎஸ்சி அறிவிப்பு !!