திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மே 26-ல்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சியில் அன்பில் அறக்கட்டளை நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பிஇ, பிடெக், எம்பிஏ, எம்சிஏ முதல் ஐடிஐ பிட்டர், டர்னர், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகள், இலகு ரக ஓட்டுநர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
Sacred Heart Higher Secondary School,
(Saamiyar School), பொன்மலைப்பட்டி,
திருச்சி.
நேரம்: காலை 8மணி முதல் முகாம் நடைபெறும்.
இம்முகாமில் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், வேலையளிப்போர் அன்பில் அறக்கட்டளை அலுவலகத்தை நேரில் அனுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.