தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமிதிருக்கோயிலில் காலியாக உள்ள ஆறு பணிகளுக்கு, இறை நம்பிக்கை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
மேலாண்மை : மாநில அரசு
பணி விவரம்
· நாதஸ்வரம்
· தவில்
· தல்லம்
· சுருதி
· உதவி அர்ச்சகர் (கீழ் சாந்தி போத்தி)
· இலை விபூதி போத்தி
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி
விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.01.2023
பணியிடங்கள் எண்ணிக்கை: 6
நாதஸ்வரம்
ஊதியம்: Rs.19,500-62,000/-
தவில்
ஊதியம்: Rs.18,500-58,600/-
தாளம்
ஊதியம்: Rs.18,500-58,600/-
சுருதி
ஊதியம்: Rs.18,500-58,600/-
உதவி அர்ச்சகர்
ஊதியம்: Rs.15,900-50,400/-
(கீழ்சாந்தி போத்தி)
இலை விபூதி
ஊதியம்: Rs.15,900-50,400/-
கல்வித்தகுதி
Ø குறைந்தபட்ச தகுதிகளாக, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Ø அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளிகளில், பணிகளுக்கு தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ் பெற்றவர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு
Ø விண்ணப்பதாரர் வயதானது, 01.12.2022 அன்று 18 வயதை பூர்த்தி செய்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் வேண்டும்.
Ø வயது வரம்பு சலுகை குறித்த விவரங்களை அறிய, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Ø பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
Ø பணியிடங்களின் எண்ணிக்கை, பதவி உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட நிர்வாக காரணங்களுக்காக மாறுதலுக்கு உட்பட்டதாகும்.
Ø நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில், நேரில் சென்று கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.
Ø ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
Ø விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இணை ஆணையர்/ செயல்அலுவலர், அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்-628215, என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 27.01.2023 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்று கொள்ளப்படும்.
Ø அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Ø விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றுகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு சான்றிட்ட நகல் மட்டுமே அனுப்ப வேண்டும். அசல் சான்றிதழை நேர்காணலின் போது கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். கேட்கப்பட்ட சான்றிதழ்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படாது.
மிஸ் பண்ணிடாதீங்க...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!
முதலில் https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
home page- ல் உள்துறை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
புதிதாக தோன்றிய பக்கத்தில், பணி குறித்தான வேலைவாய்ப்பை விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்ததாக விண்ணப்ப அறிவிக்கை இருக்கும்.
அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php