இந்திய ரயில்வேத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 50 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள, பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய ரயில்வே
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மேற்பார்வையாளர்
காலியிடங்கள் : 50
கல்வித் தகுதி : மருத்துவம் மற்றும் விடுதி நிர்வாகம் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.25,000
விண்ணப்பிக்கும் முறை : www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Gowahati-ல் உள்ள IRCTC அலுவலகத்தில் நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 12.02.2019 முதல் 20.02.2019 வரையில்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.irctc.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












