இண்டெலஜினஸ் பிரோ ரெக்ரூட்மெண்ட் பணிக்கான அறிவிப்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செண்டரல் இண்டெல்ஜின்ஸ் ஆஃபிஸர்க்கான பணி தொடர்பான காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இப்பணிக்கு விண்ணப்பிவர்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .
மத்திய இண்டலிஜின்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 5 வரை விண்ணப்பத்திற்க்கான கட்டணத்தை செலுத்தலாம் . செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும் . டையர் 1 தேர்வு நடைபெறும் நாள் அக்டோபர் 15 ஆகும் . டையர் 2 தேர்வு நடைபெறும் நாள் 2018 ஜனவரி 7, 2018 ஆகும் .
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இண்டலிஜண்ஸ் ஆஃபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 27 வயது வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம் . இந்தியா முழுவதும் பணி செய்யும் வாய்ப்பு உள்ளது . விண்ணப்ப கட்டணமாக பொதுபிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும் , எஸ்டி, எஸ்சி பிரிவினர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . தேர்வு எழுதுவோர் விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் டெபிட்கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம் .
ஜென்ரல் இண்டலிஜன்ஸ் ஆஃபிஸர் கிரேடு 2 பணியிடங்கள் மொத்த நிரப்ப 1430 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன . பொதுபிரிவினர் 951,ஓபிசி பிரிவினர் 184 இடங்கள் ஒதுக்கீடும் , எஸ்சி பிரிவினருக்கு 109 சீட்களும் , எஸ்டி பிரிவினருக்கு 56 சீட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன . முன்னாள் இராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீடு 130 இடங்கள் தரப்பட்டுள்ளது . மொத்த தொகையாக ரூபாய் 9,300 முதல் 34,800 வரை வழங்கப்படும் . அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழ்கத்தில் பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும் . இண்டலிஜண்ட் பணிக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு கீழ் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தேவையான விவரங்களை அதிகாரபூர்வ http://mha.nic.in/ இணையதளம் மூலம் பெறலாம்
சார்ந்த பதிவுகள்:
ஐபிபிஎஸ் வங்கிகளுக்கான பிஒ காலிப்பணியிடங்கள் நிரப்ப அழைப்பு
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலிப்பணியிடம் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது