மத்திய அரசின் உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துணை இயக்குநர், கூடுதல் பாதுகாப்பு அதிகாரி, நேர்முக உதவியாளர், செவிலியர் உள்ளிட்ட மொத்தம், 318 பணியிடங்கள் தற்போது நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
துறை : உளவுத் துறை
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 318
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: இங்கே கிளிக் செய்யவும்.
கல்வித் தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் டிப்ளமோ, பொறியியல் துறை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mha.gov.in/ அல்லது https://mha.gov.in/notifications/vacancies என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.