கடற்படையில் 12-வது முடித்தவர்களுக்குப் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
இந்திய கடற்படை 12-வது முடித்தவர்களை அதிகாரி பணிக்கு நியமிக்கும் பி.டெக் கேடட் என்ட்ரி ஸ்கீம் - ஜூலை 2019 என்னும் பயிற்சித் திட்டத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு 4 ஆண்டு காலம் பி.டெக் பயிற்சி வழங்கப்படும். பி.டெக் படித்ததற்கான சான்றிதழும் வழங்கப்படும். பின்னர், அதிகாரியாக நிரந்தரமாகப் பணியமர்த்தப்படுவர்.
வயது வரம்பு - 17 வயது முதல் 19.5 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தகுதி -
- 12-வது அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களில் 70 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் எஸ்எஸ்பி நடத்தும் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு முறை - எஸ்எஸ்பி நடத்தும் இரு நிலைத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை - https://www.joinindiannavy.gov.in/ என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.joinindiannavy.gov.in/ என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.