பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். இந்த படைப்பிரிவில் தற்போது '01-2019 பேட்ஜ்' அடிப்படையில் தகுதியான இளைஞர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பிரிவில் நிரப்பப்பட உள்ள காலியிடங்களுக்கு இந்திய குடியுரிமை பெற்ற, ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜெனரல் டியூடி
வயதுவரம்பு: ஜெனரல் டியூடிக்கு 1994 ஜூலை 1 முதல் 1998 ஜூன் 30க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைபட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஜெனரல் டியூடி (பைலட்)
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைபட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1994 ஜூலை 1 முதல் 2000 ஜூன் 30க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதிவாய்ந்தவர்கள். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
பணி: கமர்சியல் பைலட் என்ட்ரி
கல்வித்தகுதி: பிளஸ் 2 படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டி.ஜி.சி.ஏ., அங்கீகாரம் பெற்ற கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1994 ஜூலை 1 முதல் 2000 ஜூன் 30க்குள் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல்கூறு அளவு மற்றும் உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 2018 ஜூன் 1.
மேலும் முழுமையான விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.