இந்திய ராணுவத்தில் பணியாற்றும் நோக்கத்துடன் காத்திருக்கும் இணைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பாக தற்போது ராணுவ பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. நெய்வேலியில் உள்ள பாரதி மைதானத்தில் ஜூன் மாதம் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் ஏழு மாவட்டங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
நிர்வாகம் : இந்திய ராணுவம்
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : நாடு முழுவதும்
அனுமதிக்கப்படும் மாவட்டங்கள் :
தமிழகத்தின் கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி மாவட்டம் (யூனியன் பிரதேசம்) ஆகிய பகுதிகளில் வசிப்போர் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 17 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
அதிகாரப்பூர்வ இணையதளம் : http://www.joinindianarmy.nic.in/
விண்ணப்பம் துவங்கும் நாள் : 9 ஏப்ரல் 2019
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18 மே 2019
நுழைவுச்சீட்டு வழங்கும் நாள் : 20 மே 2019 க்குப் பிறகு
தேர்வு முறை : உடற்திறன் தேர்வு, உடற்கட்டு தேர்வு, மருத்துவ பரிசோதனை, பொது நுழைவுத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
குறிப்பு : ஆள் சேர்ப்பு முகாமிற்கு நுழைவு அட்டை, விண்ணப்பம் மற்றும் நுழைவு அட்டையில் கூறப்பட்ட ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் கொண்டு வர வேண்டும். முகாமில் வரக்கூடிய நாள் மற்றும் காலம் நுழைவு அட்டையில் தெரிவிக்கப்படும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindianarmy.nic.in என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.