இந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் X மற்றும் குரூப் Y பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, தற்போது விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கான nதர்வு தேதி அறிவிக்கப்பட்டு அடையாள அட்டை மற்றும் நுழைவுச்சீட்டு வெளியிடப்பட உள்ளது.
வரும், மார்ச் 14 முதல் 17ம் தேதி வரையில் இப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெறவுள்ளது. குரூப் X மற்றும் Y என இரு பிரிவுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
இத்தேர்விற்கான, நுழைவுச் சீட்டை விண்ணப்பதார்கள் airmenselection.cdac.in என்னும் விமானப்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த எழுத்துத்தேர்வு மற்றும் அmடுத்தகட்ட நேர்முகத் தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு இந்திய விமானப்படையில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சிக் காலத்தின் போது மாதம் 14,600 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.