மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 4ம் தேதியன்று நடைபெறும் நேர்காணலில் பங்கேற்று பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகம், தஞ்சாவூர்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 10
கல்வித் தகுதி : எம்பிஏ, பி.எச்டி, எம்.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி பயின்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.12,000 முதல் ரூ.80 ஆயிரம் வரையில்
(பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.iifpt.edu.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 04.03.2020 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Indian Institute of Food Processing Technology, Pudukkottai Road, Thanjavur - 613 005
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iifpt.edu.in/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.