கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் காலியாக உள்ள 248 சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இயற்பியல், வேதியில் துறைகளில் பட்டம் மற்றும் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 248
பணி: டெக்னிகல் ஆபிஸர் (04)
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் விரும்பந்தக்கது.
வயது வரம்பு: 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
பணி: சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட்(13)
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் விரும்பந்தக்கது.
வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
பணி: டிரெயினி (83)
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ, அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
பணி: டெக்னிஷியன்(17)
கல்வித்தகுதி: எஸ்எஸ்சி, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
பணி: டிரெயினி II (114)
கல்வித்தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் எஸ்எஸ்சி, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
பணி: அப்பர் டிவிஷன் கிளார்க் (07)
கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
பணி: ஸ்டெனோகிராபர் (10)
கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகளும் வீதம் சுருக்கெழுத்திலும், நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகளும் வீதம் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.06.2018.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.