பெரம்பலூர் ஒருங்கிணைந்த குழந்தைப் பாதுகாப்பு அலகில் (ஐசிபிஎஸ்) காலியாக உள்ள கணக்காளர் பணியை ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடம்: 1
பணியின் பெயர்: கணக்காளர்
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, வணிகவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணிதத் துறையில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 க்குள்
சம்பளம்: ரூ.14,000/-
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 26.04.2018
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைக் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக 26 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு,
164, இரண்டாவது தளம் எம்.எம்.பிளாசா,
திருச்சி மெயின் ரோடு,
பெரம்பலூர்-621212.
1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்:
2. அறிவிப்பு லிங்க்:
முகப்பு பக்கத்தில் உள்ள 'லேட்டஸ்ட் இன்பர்மேஷன்' என்ற அறிவிப்புக்கு கீழ் உள்ள அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.
3. அறிவிப்பு இணைப்பு:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.
4. விண்ணப்பம்:
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகலோடு குறிப்பிட்ட அஞ்சல் முகவரிக்கு 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.