மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னை, பெரம்பூரில் செயல்பட்டு வரும் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள 992 பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் : பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிங்கள் : 992
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :-
- கார்பெண்டர் - 80
- எலக்ட்ரீசியன் - 200
- பிட்டர் பிரிவில் - 260
- மெஷினிஸ்ட் - 80
- பெயிண்டர் - 80
- வெல்டர் - 290
- பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02
வயது வரம்பு : 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : உடல்திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.icf.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.06.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.icf.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.