நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 380 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்
தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி மேலாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 380
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின் படி மேற்கண்ட பணியிடங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட வங்கிப் பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக website www.ibps.in என்ற இணையதளம் மூலம் 21.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள் - 01/07/2020
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 21/07/2020
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.850
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ.175.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ibps.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.