நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள துணை மேலாளர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு வருடம் ரூ.9.36 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்
தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்)
மேலாண்மை : மத்திய அரசு
பணி:-
- துணை மேலாளர் - 01
- இணை ஆராய்ச்சியாளர் - 01
கல்வித் தகுதி : எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / சிவில் / எலெக்ட்ரானிக்ஸ் & டெலிகாம் / இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் துறையில் எம்.இ அல்லது எம்.டெக் படித்திருக்க வேண்டும்.
அல்லது எம்சிஏ கணினி அறிவியலில் முதுகலை பட்டம், பட்டய கணக்காளர் (சிஏ) படித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம் : குறைந்தது ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம் : இந்தியா முழுவதும்
வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : வருடத்திற்கு ரூ.9,36,020 வரையில் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ibps.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 18-10-2019 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ibps.in இந்த என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












