அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் (எஸ்பிஐ தவிர) 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான 10,190 குரூப் 'ஏ' அதிகாரி மற்றும் குரூப் 'பி' அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10190
பணியிடம்: இந்திய முழுவதும்
கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் பட்டம், உள்ளூர் மொழி அறிவு மற்றும் கணினி பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் உள்ளூர் மொழி அறிவும், கணினியில் பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.06.2018 தேதியின்படி கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பள விவரம்:
ஆபிஸ் அசிஸ்டென்ட் (Multipurpose) பணிக்கு தோராயமாக மாதம் ரூ.19000-22000
ஆபிஸர் ஸ்கேல் - I பணிக்கு தோராயமாக மாதம் ரூ.30000-36000
ஆபிஸர் ஸ்கேல் - II பணிக்கு தோராயமாக மாதம் ரூ.36000-42000
ஆபிஸர் ஸ்கேல் - III பணிக்கு தோராயமாக மாதம் ரூ.41000-47000
விண்ணப்பக் கட்டணம்: அதிகாரி (I, II, மற்றும் III), அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2018 முதல் 02.07.2018 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் வயதுவரம்பு, தகுதிகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய இந்த இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து தெரி்ந்து விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications












