இந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 31 பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மொத்த காலிப் பணியிடம் : 31
தகுதி:-
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர துறையில் இளங்கலைப் பட்டம்
- முப்படைகளில் ஏதேனும் ஒரு பிரிவில் 5 ஆண்டுகள் அதிகாரி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 2018 நவம்பர் 1ம் தேதியின்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
(எஸ்.சி, எஸ்டி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப் படி வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.)
ஊதியம் : ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை
80 கோடி பேருக்கு வேலை போகப்போது, ஆனா இவங்க மட்டும் எப்பவும் ராஜாதான்!!
தேர்வு முறை : பணி அனுபவம் தகுதியின் அடிப்படியில் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.canarabank.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
The Manager, Canara Bank Recruitment Cell, H R Wing Head Office, 112, J C Road, Bengaluru - 560 002.
விண்ணப்பக் கட்டணம் :-
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 708
- எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.118
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 03
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://canarabank.com/media/8358/rp-2-2018-manager-security-web-publ-english.pdf அல்லது www.canarabank.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.