டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெறவுள்ள குரூப் 2 முதன்மைத் தேர்விற்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வரும் ஜனவரி 10-ஆம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினத்திலேயே சான்றிதழ்களைப் பதிவேற்றவும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டிஎன்பிஎஸ்சி குரூப் 2- தொகுதிக்கு உட்பட்ட பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுற்ற நிலையில், அடுத்தகட்டமான முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஜனவரி 10-ஆம் தேதியன்று மாலை 5.30 மணிக்குள் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், முதல் நிலை எழுத்துத் தேர்வுக்குக் கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான கட்டணமான ரூ.150-ஐ தேர்வாணைய இணையத்தில் (www.tnpscexams.net) வரும் 10-ஆம் தேதியன்று மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும். கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் தேர்வர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.


Click it and Unblock the Notifications












