அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மதுரை கிளையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.57 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்- மதுரை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 05
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி முன்னாள் இராணுவத்தினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு 48 முதல் 53 வரையிலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
ஊதியம் : ரூ.18,200 முதல் ரூ.57,900 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/OA_WSA_Driver_Cook_Asst_Cook_Application_format.pdf இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கே.புதூர், மதுரை - 7.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.02.2020 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : திறன் சோதனை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://skilltraining.tn.gov.in/ என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.