மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் காந்திகிராம ஊரக நிறுவனத்தில் காலியாக உள்ள கள ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் மார்ச் 3ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : காந்தி கிராம ஊரக நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 02
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்
- கள ஆராய்ச்சியாளர் - 01
- ஆராய்ச்சி உதவியாளர் - 01
கல்வித் தகுதி :
- கள ஆராய்ச்சியாளர் - எம்.ஏ. சமூக அறிவியல்
- ஆராய்ச்சி உதவியாளர் - ஏதேனும் ஓர் துறையில் எம்.பில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் :
- கள ஆராய்ச்சியாளர் - ரூ. 10,625
- ஆராய்ச்சி உதவியாளர் - ரூ.15,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.ruraluniv.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 03.03.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.