ரூ.48,700 சம்பளத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடியில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடத்தில் பணிபுரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தற்போது எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் எழுத்தர் பதவிக்கு என ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

திருக்கோயிலில் எழுத்தர் பதவிக்கான கல்வி தகுதி:
SSLC இல் தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு சமமான தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
திருக்கோயிலில் எழுத்தர் பதவிக்கான வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15300-48700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
திருக்கோயில் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 09.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications












