மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள சுருக்கெழுத்தர், மேல் நிலை கிளர்க் உள்ளிட்ட 151 காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 151
பணியிடம் : சென்னை
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :-
- சுருக்கெழுத்தர் : 20
- மேல் நிலை கிளர்க் : 131
கல்வித் தகுதி :
சுருக்கெழுத்தர் : 12-வது தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேல் நிலை கிளர்க் : 50 சதpவகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
சுருக்கெழுத்தர் : 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
மேல் நிலை கிளர்க் : 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
தேர்வு முறை :
சுருக்கெழுத்தர் : எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, கணினித் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேல் நிலை கிளர்க் : முதல்நிலைத் தேர்வு, 2-வது நிலைத் தேர்வு, கணினி திறன் தேர்வு என 3 தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஊதியம் : ரூ. 25,500
விண்ணப்பிக்கும் முறை : www.esic.nic.in/recruitment என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.esic.nic.in/attachments/recruitmentfile/2d9f0930a584f356fc8a258ae034e57c.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












