மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
துறையின் பெயர் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ)
நிர்வாகம் : மத்திய அரசின் கீழ்
பணியிடம் : தமிழ்நாடு முழுவதும்
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :
பணி : உதவிப் பொறியாளர்
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தொடர்புடையப் பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ. 45,000
பணி : இளநிலை பொறியாளர்
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தொடர்புடையப் பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.33,630
வயது வரம்பு : 64-வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். (அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.)
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.esic.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Additional Commissioner and Regional Director, ESI Corporation, Regional Office, 143, Sterling Road, Nungambakkam, Chennai - 34
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 22.11.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.esic.nic.in/attachments/recruitmentfile/ce28d0948724efaaf1a6323864209fd7.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.