மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பயணடையலாம்.
துறையின் பெயர் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ)
நிர்வாகம் : மத்திய அரசின் கீழ்
காலிப் பணியிடங்கள் : 539
பணியிடம் : டில்லி
பணி : பொது பாதுகாப்பு அதிகாரி / மேலாளர் தகுதி-II / கண்காணிப்பாளர்
கல்வித் தகுதி :
- வர்த்தகம், சட்டம், மேலாண்மை (அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவத்தில்)
- கணினித் திறன்
வயதுவரம்பு : 12 வயது முதல் 27 வரை, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.
சம்பளம் : ரூ.44,900
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ. 500
- எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.10.2018
தேர்வு நடைபெறும் நாள் : 2018 நவம்பர் மற்றும் டிசம்பர்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பத்தினைப் பெற இஎஸ்ஐ-யின் அதிகாரப் பூர்வ இணையதளமான https://www.esic.nic.in/recruitments அல்லது https://www.esic.nic.in/attachments/recruitmentfile/8f87c0233b19a3cd64cb2165efdd8bb8.pdf ஆகிய லிங்க்குளை கிளிக் செய்யவும்.