ஈரோடு மாவட்டம், நசியனூர் பேரூராட்சியில் காலியாக உள்ள தூண்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நசியனுர் பேரூராட்சி, ஈரோடு
மேலாண்மை : தமிழக அரசு
பணி : தூய்மை பணியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 21 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 15.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்புகள் :
விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும். நேரில் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு குறித்த விவரம் பதிவஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.09.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பைக் காணவும்.