தமிழக அரசிற்கு உட்பட்ட ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி அடைந்தவர்கள் முதல் பி.காம். பயின்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையுங்கள். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி இன்றாகும்.
நிர்வாகம் : ஈரோடு மாவட்ட நீதிமன்றம்
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
- அலுவலக உதவியாளர் - 23
- தோட்டக்காரர் - 01
- இரவு காவலர் - 01
- மசால்ஜி மற்றும் இரவு காவலர் - 06
- அலுவலக உதவியாளர் - 52
- ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 13
- முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - 08
- கணினி இயக்குபவர் - 05
- லிப்ட் ஆப்ரேட்டர் - 01
- சுகாதார பணியாளர் - 01
- காவலாளி - 09
- மசால்ஜி - 13
கல்வித் தகுதி :
அலுவலக உதவியாளர் : 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் பணியிடங்களுக்கு - 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குபவர் : பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பி.ஏ
லிப்ட் ஆப்ரேட்டர், சுகாதார பணியாளர், காவலாளி, மசால்ஜி, தோட்டக்காரர், இரவு காவலர், மசால்ஜி மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கு எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
- 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.
ஊதியம் : ரூ. 15,000 முதல் ரூ.65,500 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/erode என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chief Judicial Magistrate, Chief Judicial Magistrate Court, Erode - 638 011.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.06.2019 தேதிக்குள் (இன்று) கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/erode என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.