தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலாளர் மற்றும் பொது மேலாளர் உள்ளிட்ட இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஆவின்
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம் : ஈரோடு
பணி : மேலாளர், பொது மேலாளர்
கல்வித் தகுதி:-
- மேலாளர் (IR) பணிக்கு தொடர்புடைய பிரிவில் எம்.பி.ஏ. முடித்திருக்க வேண்டும்.
- மேலாளர் (கணக்கு) பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சி.ஏ. இன்டர் அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ. இன்டர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலாளர் (IR) பணியிடத்திற்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
ஊதியம் : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
விண்ணப்பக் கட்டணம் :
- ஓ.சி., எம்.பி.சி., மற்றும் ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு - ரூ.250
- எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்குக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை டிடி வடிவில் மட்டும் கீழ்க்கண்ட முகவரியில் மாற்றத்தக்க வகையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
பொது மேலாளர், ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், ஸ்ரீ வாசவி கல்லூரி (அஞ்சல்), ஈரோடு - 638 316.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.08.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய
https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/tded100719.pdf/5306315a-4959-5a08-78e3-ce2739c7f582¬iceURL=/documents/20142/0/tned100719 (1).pdf/bc9f8e58-f3a1-f794-4663-b239b0f18dbb¬iceName= என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தினைப் பெற
https://aavinmilk.com/documents/20142/0/tded100719.pdf/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.