மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இ.பி.எப்.ஓ. என்னும் (மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட்) தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 280 உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.45 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 280
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- 25.6.2019 தேதியின்படி 20 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.44,900
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500
- எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : இபிஎப்-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.06.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf என்ற லிங்கினை கிளிக் செய்யவும்.