மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இ.பி.எப்.ஓ. என்னும் (மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட்) தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள சமூக பாதுகாப்பு உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளங்கலை பட்டம் பெற்று தகுதியுடையவர்கள் இப்பணியிடத்திற்கு உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணி : சமூக பாதுகாப்பு உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 2189
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.25,500 வரையில்
வயது வரம்பு : 21.07.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு நிலை I, நிலை II என இரு நிலைகளாக நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500.
- பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
www.epfindia.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.07.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_Recruit_SSA_109.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












