நேஷனல் அப்ரென்டிஸ்ஷிப் புரமோஷன் ஸ்கீம் திட்டம் (NAPS) மூலம் இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் (Engineers India Limited -EIL) காலியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு
https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/657682f53df216234e4c58a0 என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்தியாவில் தொழிற்பயிற்சியை ஊக்குவிக்கும் முயற்சியில், ஒரு புதிய திட்டமாக தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் எனப்படும் நேஷனல் அப்ரென்டிஸ்ஷிப் புரமோஷன் ஸ்கீம் (NAPS) ஆகஸ்ட் 2016 இல் மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொழிற்பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE) மூலம் இந்திய அரசு தேசிய திறன் மேம்பாடு கழகத்தின் (NSDC) பங்கு மூலதனத்தில் 49 சதவீதத்தை என்ஏபிஎஸ் வைத்திருக்கிறது, அதே சமயம் தனியார் துறையின் பங்கு மூலதனத்தில் மீதமுள்ள 51% உள்ளது. இந்த இந்திய அரசு தேசிய திறன் மேம்பாடு கழகத்தின் கீழ்தான் நேஷனல் அப்ரென்டிஸ்ஷிப் புரமோஷன் ஸ்கீம் திட்டம் செயல்படுகிறது.
NSDC பெரிய, தரமான மற்றும் லாப நோக்கற்ற தொழிற்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், நிறுவனமானது அளவிடக்கூடிய மற்றும் லாபகரமான தொழிற்பயிற்சி முயற்சிகளை உருவாக்க நிதியுதவி வழங்குகிறது. தர உத்தரவாதம், தகவல் அமைப்புகள் மற்றும் பயிற்சியாளர் அகாடமிகளுக்கு நேரடியாகவோ அல்லது கூட்டாண்மை மூலமாகவோ பயிற்சி அளிக்கும் ஆதரவு அமைப்பை செயல்படுத்துவதும் இதன் பணியாகும்.
திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் திறன் மேம்பாட்டுக்கான ஊக்கியாக NSDC செயல்படுகிறது. தனியார் துறை முன் முயற்சிகளை மேம்படுத்தவும், ஆதரிக்கவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் பொருத்தமான மாதிரிகளை இது உருவாக்குகிறது. என்எஸ்டிசியின் கீழ் உள்ள 37 துறைகளில் வேறுபட்ட கவனம் செலுத்துதல் மற்றும் அவற்றின் நம்பகத்தன்மை பற்றிய புரிதல் ஆகியவை ஒவ்வொரு துறையையும் தனியார் முதலீட்டுக்கு ஈர்க்கும்.
இந்த பெருமைமிகு நிறுவனத்தில்தான் தற்போது டிராப்ட்ஸ்மேன்-மெக்கானிக்கல் (Draughtsman - Mechanical) பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிராப்ட்ஸ்மேன் -மெக்கானிக்கல் (Draughtsman - Mechanical) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் 08ம் / 10ம் / 12ம் வகுப்பு + ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
இந்த இஐஎல்(EIL) நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.5,000/- முதல் ரூ.13,228/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.
டிராப்ட்ஸ்மேன்-மெக்கானிக்கல் (Draughtsman - Mechanical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு
https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/657682f53df216234e4c58a0 என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












