கிழக்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள எழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட 252 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : கிழக்கு ரயில்வே
மொத்த காலிப் பணியிடம் : 252
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
கமெர்ஷியல் மற்றும் டிக்கெட் கிளர்க்
கல்வித் தகுதி : 50 சதவிகித மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் : 124
முன் அனுபவம் : விண்ணப்பதாரர் குறைந்தது 5 முதல் 10 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
பொதுப்பிரிவினர் 42 வயதிற்கு உட்பட்டும், ஓபிசி பிரிவினர் 45 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 47 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஜூனியர் கிளர்க் மற்றும் தட்டச்சர்
கல்வித் தகுதி : 50 சதவிகித மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி : ஆங்கிலம் மற்றும் இந்தியில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடத்தில் 20 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் : 128
முன் அனுபவம் : குறைந்தது 5 முதல் 10 வருடங்கள் முன் அனுபவம் தேவை
பணியிடம் : கொல்கத்தா
விண்ணப்பிக்க கடைசி நாள் : 1 அக்டோபர் 2019 (இன்று)
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். (தட்டச்சு பிரிவுக்கு தட்டச்சு தேர்வும் நடைபெறும்.)
இப்பணியிடத்தில் சேர விரும்புவோர் www.rrcer.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் மூலம் அக்டோபர் 1ம் தேதிக்குள் (இன்று) விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












