கிழக்குக் கடற்கரை ரயில்வேத் துறையில் காலியாக உள்ள சூப்பிரண்டு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 23 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : கிழக்கு கடற்கரை ரயில்வே
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 23
தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி குறித்த விபரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
விண்ணப்பிக்கும் முறை :
கிழக்கு கடற்கரை ரயில்வேத் துறையில் உள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.eastcoastrail.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2020 ஏப்ரல் 28 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
ஆபீஸ் சூப்பிரண்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், LDCE எழுத்துத்தேர்வு, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://eastcoastrail.indianrailways.gov.in/uploads/files/1584707856763-OS LDCE 001.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












